தேர்தல் பரப்புரைக்காக பதிவெண் பெறாத வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த 12-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து, இன்று முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கமல், சீமான், டிடிவி போன்ற தலைவர்கள் உட்பட பல அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் காரசாரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் பரப்புரைக்காக பதிவெண் பெறாத வாகனங்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வாகன உரிமையாளர், விற்பனையாளர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதிவெண் பெறாத வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், நீதிமன்றத்தால் அபராதமும் விதிக்கப்படும் என்றும், வாகன விற்பனையாளர்கள் வணிக சான்று தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…