தடையை மீறி விநாயகர் சிலை வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, வருகிற விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விநாயகர் சதுர்த்தியை வீடுகளில் இருந்தபடியே மக்கள் கொண்டாடலாம் எனவும், தெருக்களில் ஊர்வலமாக விநாயகர் சிலையை கொண்டு செல்லக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய பொழுது, விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி விநாயகர் சிலையை பொது இடத்தில் வைத்து வழிபட்டாலோ அல்லது ஊர்வலமாக எடுத்துச் சென்றாலோ கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலையை பொது இடங்களில் வைப்பது தவறு என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…