தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் முதலமைச்சர் பழனிசாமி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்களை நியமித்துள்ளதாகவும், கொரோனா பாதிப்பை கண்டறிய வீடு வீடாக சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இன்னும் 10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அப்போது தான் கொரோனா பாதிப்பை குறைக்க முடியும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது சென்னையில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருவதாகவும், கொரோனா பரிசோதனைகள் தமிழகத்தில் தான் அதிகம் செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு ரூ. 672 கோடியை கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு வழங்கி உள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…