கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் இருளில் வசித்து வரும் நிலையில், தூத்துக்குடி, நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சிவ்தாஸ் மீனா இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். போர்க்கால அடிப்படையில் மின்சாரம் விநியோகம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
மேலும், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மீட்பு, நிவாரப்பணிகளை விரைவுபடுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்டுகிறது.
கனமழை எதிரொலி.! நெல்லை, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதிப்பு குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…