மே 3 ஆம் தேதிக்கு பிறகு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை தமிழக அரசிடம் அறிக்கையை வல்லுநர் குழு சமர்பித்துள்ளார்கள்.
எந்தந்த பகுதிகளில் தொழில் தொடங்கலாம் என்பது பற்றி தமிழக வல்லுநர் குழு 2 ஆம் அறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம் சமர்ப்பித்துள்ளனர். இதையடுத்து மே 3 க்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வல்லுநர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு தனது 2ம் கட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான குழு முதல்வரிடம் அறிக்கையை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மே 3ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வகுக்க தான் அமைத்த 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, வல்லுநர்கள் மற்றும் மற்ற அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தங்களது இடைக்கால அறிக்கையை என்னிடம் இன்று சமர்பித்தனர் என்று பதிவிட்டுள்ளார்.
இதுபோன்று நேற்று கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், ஊரடங்கை முழுமையாக தளர்த்த முடியாது என்று கூறினார். பின்னர் கொரோனா குறித்தும், ஊரடங்கை பற்றியம் முதல்வரிடம் ஆலோசனை வழங்கியுள்ளதாக மருத்துவர் நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…
லக்னோ : சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…