ஆளுநருக்கு எதிராக திமுக எடுத்த அதிரடி முடிவு! எம்பிகளுக்கு அழைப்பு!

Default Image

நாளைக்குள் அறிவாலயம் வந்து மனுவை படித்து பார்த்து கையெழுத்திடுமாறு திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்களுக்கு அழைப்பு.

தமிழகத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருவதாக பல்வேறு குற்றசாட்டு எழுந்து வரும் நிலையில், ஆளுநருக்கு எதிராக திமுக தலைமை அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு குடியரசு தலைவரிடம் மனு அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டிஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாளைக்குள் சென்னை அண்ணா அறிவாலயம் வந்து, ஆளுநரை திரும்ப பெறுவதற்காக குடியரசு தலைவரிடம் அளிக்க உள்ள மனுவை படித்து பார்த்து கையெழுத்திடுமாறு வேண்டுகோளை வைத்து அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் ஆளுநர் இடையே மோதல் முற்றும் நிலையில், திமுக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கோவை சம்பவம் குறித்து சமீபத்தில் ஆளுநர் கருத்து தெரிவித்த நிலையில், திமுக கூட்டணி முடிவு செய்துள்ளது. எனவே, ஆளுநரை திரும்ப பெறுவதற்கான மனுவை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் படித்து பார்த்து கையெழுத்திடுவதை அடுத்து விரைவில் டெல்லி சென்று அந்த மனுவை குடியரசு தலைவரிடம் திமுக தலைமை அளிக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்