சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு அனுமதி தற்காலிக ரத்து.
கொரோனா நோய் தொற்று காலத்தில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் சிகிச்சைக்கு அதிக நிதிச்சுமைக்கு ஆளாகாத வண்ணம் தனியார் மருத்துவமனைகளில் அதிகபட்சமாக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சைகளையும் அதற்காக தனியார் மருத்துவமனைகளில் வாங்கும் கட்டணங்கள் குறித்து அரசு தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது, நோயாளி ஒருவருக்கு 18 நாட்களுக்கான சிகிச்சைக்கு ரூ.12.5 லட்சம் கட்டணம் என கூறி முன்பணமாக ரூ 2.5 லட்சம் பணம் வாங்கிய மீத கட்டணத்தை செலுத்த அப்பாசாமி மருத்துவமனை கூறியது விசாரணையில் தெரியவந்தது.
இதனால், அப்பாசாமி மருத்துவமனைக்கு கொரோனா நோய்சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்ணயக்கப்பட்ட கட்டணங்களை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததால் அந்த மருத்துவமனை மீது சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இன்று விளையாடும் போட்டியில் ஆஸ்ரேலியா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இந்த இரண்டு…