Tamilnadu CM MK Stalin [Image source : India Today]
மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், மீனவர்கள் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. மறுபக்கம், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், கைது என தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி, இலங்கை கடற்படைக்கு செயலுக்கு கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய முதல்வர்..!
இந்த சூழலில், சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை விரைவில் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு மொத்தம் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.! அமைச்சர் அறிவிப்பு.!
அக்கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீன் இறங்குதளத்திலிருந்து, 1-10-2023 அன்று, IND-TN-12-MM-6376 பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள், 23.10.2023 அன்று தினாது தீவு அருகே மாலத்தீவு கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய தூதரக நடவடிக்கைகள் மூலம், மாலத்தீவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட வேண்டுமென்று முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…