பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி…! யாரையும் விடப்போவதில்லை – அண்ணாமலை பேட்டி

Default Image

தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி என அண்ணாமலை பேட்டி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி. யாரையும் விடப்போவதில்லை; தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி.

சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை; தவறு செய்தவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பாஜக வரவேற்றது. முழுமையாக ஆதரிக்கிறது; அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்