சசிகலா உள்பட 8 பேர் மீது நடவடிக்கை – தமிழக அரசு உத்தரவு

Published by
பாலா கலியமூர்த்தி

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரையின் படி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்த சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சசிகலா, உறவினரான சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்று, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஒய்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம் ஆகியோர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உரிய விசாரணை நடத்துவதுடன் சட்ட நிபுணர்கள் ஆலோசனை பெற்று 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணைய அறிக்கை தற்போது சுகாதாரத்துறை முதன்மை செயலாளரிடம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த ஆய்வு முடிந்த பிறகு சட்ட வல்லுனர்களுடன் கருத்து கேட்கப்பட்டு ஆலோசனை செய்யப்படும். அதன்பின் சட்ட ரீதியான நடவடிக்கைகள் அல்லது கிரிமினல் நடவடிக்கைகள் தேவைப்பட்டால் மேற்கொள்ளப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனிடைய, தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அமைச்சரவை நீக்கம்.! ஆதங்கத்தை வெளிப்படுத்தினரா மனோ தங்கராஜ்.? பின்னணி என்ன.?

அமைச்சரவை நீக்கம்.! ஆதங்கத்தை வெளிப்படுத்தினரா மனோ தங்கராஜ்.? பின்னணி என்ன.?

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. நீண்ட நாட்களாக திமுகவினர் எதிர்நோக்கி காத்திருந்த '…

25 mins ago

IND-WvsWI-W : பூஜா, ஜெமிமா அதிரடி! 20 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபாரம்!

துபாய் : ஐசிசியின் அடுத்த கட்ட தொடரான மகளீருக்கான டி20 உலகக்கோப்பை வரும் அக்- 3 முதல் அக்-20 வரை  துபாயில்…

50 mins ago

‘நரகமே நடுங்குது பாரு’…வசூலில் மிரட்டும் தேவாரா! 3 நாட்களில் இவ்வளவா?

சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக்…

1 hour ago

ENGvsAUS : “போட்டியின் குறுக்கே வந்த கனமழை”! தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி அசத்தல்!

பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…

12 hours ago

துணை முதல்வர் உதயநிதியின் முதல் நாள்.! பெரியார் திடல் முதல்., கலைஞர் இல்லம் வரை..,

சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…

18 hours ago

செந்தில் பாலாஜி எனும் நான்.., ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி பிரமாணம்.!

சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…

19 hours ago