கடந்த ஜனவரி 17ஆம் தேதி உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 18 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம் கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 17 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்ற மாடுபிடி வீரருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
கீழக்கரை ஜல்லிக்கட்டு – இன்று முன்பதிவு தொடக்கம்.!
இதனை தொடர்ந்து, தான்தான் அதிக காளைகளை அடக்கியதாகவும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அபி சித்தர் முன்வைத்து இருந்தார். இதுகுறித்து தற்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் அபி சித்தர் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் கார்த்திக்கு 3 சுற்றுகள் வரை விளையாட அனுமதிக்கப்பட்டது. இறுதி சுற்றில் தான் அதிக காளைகளை அடக்கினேன். ஆனால் , முதற்பரிசு கார்த்திக்கு வழங்கப்பட்டது. எனக்கு முதற்பரிசு கார் தேவையில்லை . ஆனால் நான் தான் வெற்றியாளர் என அறிவித்தால் மட்டும் போதும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த மனுவில் அபி சித்தர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாவும், ஜனவரி 24இல் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் இதுகுறித்து மனு அளிக்க உள்ளதாகவும் அபி சித்தர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…