மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் ஆவின் பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டு, எப்படி ஈ வந்தது என விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் ஆவின் பால் வேன் மூலம் டிப்போக்களுக்கு அனுப்பப்படும். அப்படி, நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலை கழகம், கீழமாத்துார் உ ள்ளிட்ட ஆவின் பால் டெப்போக்களுக்கு பால் பாக்கெட்டுகள் அதிகாலையில் வினியோகிக்கப்பட்டன.
இதில் காமராஜ் காமராஜ் பல்கலையில் அருகே உள்ள ஆவின் பால் விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை ஒரு பெண் பச்சை நிற ஆவின் அரைலிட்டர் பால் பாக்கெட் வாங்கியுள்ளார். அதில் ஈ பாக்கெட் உள்ளே இருந்தததை கண்டு அதிர்ந்த அந்த பெண், விற்பனையாளரிடம் பால்பாக்கெட்டை திருப்பி கொடுத்துள்ளார்.
பின்னர், ஆவின் மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர்கள் கூறுகையில், பேக்கிங் செய்யும் போது தவறுதலாக ஏதேனும் நடந்திருக்கும். இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…