ஆவின் பால் 6 ரூபாய் விலையேற்றம்! எந்தெந்த கலர் எவ்வளவு விலை? முழு விவரம் உள்ளே!

Published by
மணிகண்டன்

ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாயாக  உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்தது .

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதால் பாலின் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாகவும் இதனால் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என்று அரசு தெரிவித்தது .இந்த விலை உயர்வு குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .

இதனிடையில் நள்ளிரவு முதல் ஆவின் பால் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது .இதனிடையே தயிர் ,மோர் ,நெய் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விலை உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சம் .5 ஆண்டுகளுக்கு முன்னர் கடைசியாக 2014 ம் ஆண்டு பால் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த விலையேற்றத்தின்படி, பசும்பாலில் கொள்முதல் விலை 28 ரூபாயில் இருந்து,  32 ரூபாயாகவும்,  எருமை பாலின் கொள்முதல் விலை 35 ரூபாயில் இருந்து,  41 ரூபாயாகவும் உயர்த்தபட்டுள்ளது.

இதனால் பயனர்களுக்கு ஒரு லிட்டருக்கு 6 ரூபாயும், அரை லிட்டருக்கு 3 ரூபாயும்  உயர்த்தப்பட்டுள்ளது. எந்தெந்த வகை பால் எவ்வளவு விலை கீழே பாப்போம்.

நீலம் : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 17 ரூபாயில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 20 ருபாயாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 18 ரூபாய் 50 காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 21 ரூபாய் 50 காசாக உள்ளது.

பச்சை  : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 19 ரூபாய் 50 காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 22 ருபாய் 50 காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 20 ரூபாய் 50 காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 23 ரூபாய் 50 காசாக உள்ளது.

ஆரஞ்சு  : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 21 ரூபாய் 50 காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 24 ருபாய் 50 காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 22 ரூபாய் 50 காசில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 25 ரூபாய் 50 காசாக உள்ளது.

மெஜந்தா  : அட்டைதாரர்ளுக்கு அரை லிட்டர் 16 ரூபாய் 50 காசில் இருந்து 3 ருபாய் உயர்ந்து 19 ருபாய் 50 காசாகவும், மற்றவர்களுக்கு அதிகபட்ச விலையாக 17 ரூபாயில் இருந்து 3 ரூபாய் உயர்ந்து 20 ரூபாயாக உள்ளது.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

3 minutes ago

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

சென்னை :  கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…

34 minutes ago

“அடிச்சி நொறுக்குவேன்..,” சொன்ன சம்பவத்தை செய்து காட்டிய இளம் வீரர் வைபவ்!

ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…

49 minutes ago

சித்திரைத் திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கொடியேற்றம்.!

மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…

1 hour ago

இனி ‘காலனி’ என்ற சொல் கிடையாது! முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…

2 hours ago

நம்பர் 1, நம்பர் 1, நம்பர் 1.., திராவிட மாடல் சாதனைகளை பட்டியலிட்ட முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…

2 hours ago