வாடகை வீட்டில் இருக்கும் பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்திய சாமியார்!உயிருக்கு பயந்து ஊரையே விட்டு செல்வதாக கூறிய பெண்!

Default Image

சேலத்தில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் புஷ்பா.இவர் கரசோ‌ஷலிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராகவும் உள்ளார்.மேலும் கணவனை இழந்த இவர் தனது மகனுடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சங்கர் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.அந்த வீட்டின் உரிமையாளர் மகன் தமது வீட்டில் வாடகைக்கு இருக்கும் பெண்களை இரவு பூஜைக்கு வரவழைத்து நிர்வாகமாக நிற்கவைத்து பூஜை செய்து வந்துள்ளார்.

மேலும் வீட்டின் உரிமையாளரின் உறவினர்கள் அந்த பெண்களை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.பூஜைக்கு வரவில்லை என்று பெண்கள் கூறினால் அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதனால் கணவனிடம் கூட சொல்லமுடியாமல் நிறைய பெண்கள் வீட்டை காலிசெய்து கொண்டு சென்றுள்ளனர்.மேலும் அந்த வீட்டின் உரிமையாளர் புஷ்பாவையும் இரவு பூஜைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

ஆனால் அதற்கு புஷ்பா மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த வீட்டின் உரிமையாளர் புஷ்பா வாங்கி கொடுத்த வீட்டு பத்திரத்தை 1 லட்சம் லஞ்சம் கொடுத்து வாங்கியதாக கூறிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பா காவல்துறையினரிடம் சென்று புகார் அளித்துள்ளார்.இறுதியில் உயிருக்கு பயந்து ஊரையே விட்டு செல்வதாக கூறியுள்ளார்.இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு தொடுத்து விசாரணை நடத்தி வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்