#BREAKING: தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு.?

Default Image

தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஊரடங்கு  நீட்டிக்க அனைத்து சட்டமன்ற கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இதற்கு முன் மருத்துவக்குழுவுடன் நடைபெற்ற கூட்டத்தில்,  கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை இரண்டு வாரம் அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் பரிந்துரை வழங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பில், 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கும் எனவும் முதல் வாரம் தீவிர ஊரடங்கையும், இரண்டாவது வாரம் தளர்வுடன் ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்