சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை…உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள் -சி.வி.சண்முகம்..!

Default Image

இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை ஒருவர் கைப்பற்றுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை டி.டி.வி. தினகரனிடம் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்.

குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையை காப்பாற்றிக்கொள்ள சொல்லுங்கள். நான் நிதானமாக பேசுகிறேனா..? என தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு “ஊத்திக்” கொடுத்தார். அவரோட தொழிலே “ஊத்திக்” கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள்.

கூவத்தூரில் ஊத்திக் கொடுத்தார் எங்க இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள். எந்த காலத்திலும், எந்த நிலையிலும், எந்த சூழ்நிலையிலும் அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்ககளின் உழைப்பிலும், இரத்தத்தாலும் உருவாக்கப்பட்டது.

இந்த இயக்கம் எந்த காலத்திலும் இந்த குடும்பத்திற்கு அடிமையாக இருக்காது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்