சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

சென்னை: சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல் விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார், சேலம், சென்னை, திருச்சி என பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், ஏற்கனவே கோவை கிரைம் போலீசார் முன்னதாக ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், அடுத்து திருச்சியில் பதியப்பட்ட வழக்கிற்காக நேற்று சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி அழைத்து வரப்பட்டார்.

நேற்று திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து , அவர் மீதான வழக்கு தொடர்பாக 7 நாள் போலீஸ் காவல் அளிக்க வேண்டும் என திருச்சி கிரைம் போலீசார் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

இந்த அனுமதி கோரிக்கை தொடர்பான விசாரணையை தொடர்ந்த நீதிபதி ஜெயப்பிரதா, அரசு தரப்பு மற்றும் சவுக்கு சங்கர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு இன்று உத்தரவு பிறப்பித்தார். அதில், சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியதாக திருச்சி கிரைம் போலீசாரால் பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் முதல் குற்றவாளியாகவும், பெலிக்ஸ் இரண்டாவது குற்றவாளியாகவும் குறிப்பிட்டுள்ளனர். பெலிக்ஸ் முன்னதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

37 minutes ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

54 minutes ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

1 hour ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

1 hour ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

2 hours ago