சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

Published by
மணிகண்டன்

சென்னை: சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல் விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கூறி யூ-டியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார், சேலம், சென்னை, திருச்சி என பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், ஏற்கனவே கோவை கிரைம் போலீசார் முன்னதாக ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், அடுத்து திருச்சியில் பதியப்பட்ட வழக்கிற்காக நேற்று சவுக்கு சங்கர், கோவை மத்திய சிறையில் இருந்து திருச்சி அழைத்து வரப்பட்டார்.

நேற்று திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதனை அடுத்து , அவர் மீதான வழக்கு தொடர்பாக 7 நாள் போலீஸ் காவல் அளிக்க வேண்டும் என திருச்சி கிரைம் போலீசார் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

இந்த அனுமதி கோரிக்கை தொடர்பான விசாரணையை தொடர்ந்த நீதிபதி ஜெயப்பிரதா, அரசு தரப்பு மற்றும் சவுக்கு சங்கர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு இன்று உத்தரவு பிறப்பித்தார். அதில், சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருச்சி கிரைம் போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியதாக திருச்சி கிரைம் போலீசாரால் பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் முதல் குற்றவாளியாகவும், பெலிக்ஸ் இரண்டாவது குற்றவாளியாகவும் குறிப்பிட்டுள்ளனர். பெலிக்ஸ் முன்னதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு., 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்..,

சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில்  அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…

11 mins ago

ENGvsAUS : 4-வது ஒருநாள் போட்டி! ஒரே ஓவர் தான் …ஆனால் 2 வெவ்வேறு சாதனை!

லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…

15 mins ago

பிக் பாஸ் சீசன் 8 : கமல்ஹாசன் இடத்தை பூர்த்தி செய்வாரா விஜய் சேதுபதி?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…

35 mins ago

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து விபத்து.. தொழிலாளர்களின் நிலை என்ன?

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு…

47 mins ago

மாடு திருட்டு., ஆந்திரா கொள்ளை., 60 பேர் கொண்ட கும்பல்.! ஏ.டி.எம் கொள்ளையர்களின் ‘பகீர்’ பிண்ணனி..,

நாமக்கல் : நேற்று அதிகாலை கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்-களில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் ,…

57 mins ago

INDvsBAN : கிரீன் பார்க்கில் தீவரமடையும் மழை! 2-ஆம் நாள் ஆட்டம் நடக்குமா?

கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…

2 hours ago