எல்லை தாண்டி மீனவர்கள் மீன் பிடித்ததாகவும், அதனை எச்சரிக்க படகை நோக்கி இந்திய காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக தமிழக மீனவர் வீரவேல் மீது குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது .
மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். நேற்று அவர்கள் கோடியக்கரை அருகே மீன் பித்ததாக தெரிகிறது.
அந்த சமயம் ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்தனையும் மீறி அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் கடலோர காவல்படையினர் சார்பில் இதுகுறித்த விரிவான விளக்கம் வெளியாக வில்லை. மீதம் உள்ள 9 மீனவர்களிடமும் அதிகாரிகள் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் குண்டடிபட்ட மீனவர் வீரவேலுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காட்டது. பின்னர் அங்கு குண்டு அகற்றும் வசதி இல்லாத காரணத்தால் தற்போது மீனவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். முழங்கால், வயிற்று பகுதியில் மீனவர் வீரவேலுக்கு குண்டு பாய்ந்துள்ளளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…