பட்டமளிப்பு விழாவில் தங்க பதக்கத்தை வேண்டாமெனக் கூறிய கல்லூரி மாணவி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • புதுச்சேரி பல்கலைக்கழக 27-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.
  • எந்தவொரு காரணம் இல்லாமல் தன்னை வெளியேற்றியதால் தங்க பதக்கத்தை ஏற்க மருத்துள்ளேன் என மாணவி ரஃபியா தெரிவித்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு மட்டுமே பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னதாக மாணவர்கள் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடந்தன. இதனால் மாணவர்கள் பதக்கத்தை வாங்க வேண்டாம் என திட்டமிட்டு இருந்ததாக தெரிய வந்தது. அந்த வகையில் பாதுகாப்பு கருதி அதிகாரிகள் அந்த மாணவியை வெளியே அழைத்து தனியாக அமர வைத்தனர்.

மேலும், பட்டமளிப்பு விழா நடக்கும் அரங்கத்தில் தனியாக அமர வைத்த கேரளாவைச் சேர்ந்த மாணவி ரஃபியாவை அதிகாரிகள் அழைத்து விசாரணை செய்தனர். பின்னர், அவர் சி.ஏ.ஏ எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும் என்று நினைத்தே காவல்துறை அதிகாரிகள் மாணவியை உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் தெரிகிறது. அந்த மாணவி பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர். குடியரசு தலைவர் புறப்பட்டு சென்ற பின்னரே அந்த மாணவியை உள்ளே அனுமதித்தனர்.

அதனை தொடர்ந்து மாணவி ரஃபியாவிற்கு தங்க பதக்கம் வழங்கப்படும் பொழுது. அதனை ஏற்க மறுத்த மாணவி, எந்தவொரு காரணமும் இல்லாமல் தன்னை வெளியேற்றியாதல் தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன் எனவும், பின்னர் நான் ஹிஜாப் அணிந்து வந்த காரணமா என தெரியவில்லை என்று கூறினார். மேலும், CAA மற்றும் NRC எதிராக அமைதியான முறையில் போராடும் ஒவ்வொருவருக்கும் ஆதரவளிக்கும் விதமாக இந்த பதக்கத்தை மறுத்துள்ளதாகவும் மாணவி ரஃபிஹா குறிப்பிட்டுருந்தார். இதனால் இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

நீட் விலக்கு : “திமுக அரசு ஏன் உச்சநீதிமன்றம் போகல?”அண்ணாமலை சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…

1 hour ago

நான் ஏன் ஜெயலலிதாவை எதிர்த்தேன்? ரஜினிகாந்த் பரபரப்பு விளக்கம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…

2 hours ago

EMI செலுத்துவோர் கவனத்திற்கு.., ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த RBI! எவ்வளவு தெரியுமா?

டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…

3 hours ago

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை! முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…

4 hours ago

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற…

4 hours ago

சென்னையை துரத்தும் துரதிருஷ்டம்.! 180+ சேஸிங்கில் தொடர்ந்து கோட்டை விடும் சிஎஸ்கே.!

பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…

5 hours ago