இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் உயிரோடிருப்பது போன்று அமர்ந்திருந்த மாணவி!

Published by
Sulai

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரியகோடு பகுதியில் மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ரெமி பிராங்க்ளின்.அந்த பள்ளி மிகவும் அனைவரும் கண்டிப்பாக நடந்து கொள்வார்களாம்.
ஒரு நாள் கணக்கு வகுப்பு நடந்திருக்கிறது.அப்போது ஆசிரியர் கரும்பலகையில் ஒரு கணக்கை எழுதி அந்த மாணவியிடம் கணக்கை பூர்த்தி செய் என்று கூறியுள்ளார்.அந்த கணக்கிற்கு சரியான பதிலை பூர்த்தி செய்யாததால் அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களின் முன்னால் அந்த மாணவி ரெமியை அவதூராக பேசியுள்ளார்.
ஆனால் அதற்கு அந்த மாணவி அழவில்லை.சிறிது நேரம் நிற்க சொல்லி தண்டனை அளித்துள்ளார்.பிறகு அந்த மாணவியை அவரது இருக்கையில் சென்று அமர சொல்லியிருக்கிறார்.
அப்போது தனது இருக்கையில் அமர்ந்த அந்த மாணவி ரெமி கரும்பலகையை பார்த்தபடி அமர்ந்துள்ளார்.ஆசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருப்பதால் மற்ற மாணவர்களும் ரெமியின் செயலை கவனிக்கவில்லையாம்.
பிறகு பாடம் நடத்தி முடிந்த பிறகு ஆசிரியர் வெளியே செல்ல இருந்த போதும் ரெமி அப்படியே அமர்ந்திருந்துள்ளார்.அதை பார்த்த ஆசிரியர் உடனே பக்கத்தில் சென்று அவரை தட்டியுள்ளார்.அப்போது முன்னே இருந்த மேசையில் அப்படியே சரிந்துள்ளார்.
அப்போது பதறி போன ஆசிரியர் உடனே பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார்.அவர் உடனே அந்த மாணவியின் வீட்டிற்கு தொடர்பு கொண்டு உங்களின் மக்களுக்கு ரொம்ப தலைவலி உடனே வாருங்கள் என கூறியுள்ளனர்.
என்ன எதுவென்று தெரியாமல் அந்த மாணவியின் பெற்றோர் பதறியடித்து வந்துள்ளனர்.அப்போது மயங்கி கிடந்த தங்களின் மகளை பார்த்து உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்து மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார்.
அங்கு அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி இறந்து 1 மணி நேரத்திற்க்கு மேலாகி விட்டது என கூறியுள்ளார்.உடனே அந்த மாணவியின்  பெற்றோர் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் உயிரோடிருப்பது போன்று அமர்ந்திருந்த மாணவியின் இந்த சம்பவம் அந்த பகுதியில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Sulai

Recent Posts

டி20-யில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி! ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கொடுத்த இந்திய அணி!

டி20-யில் கலக்கிய வருண் சக்கரவர்த்தி! ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கொடுத்த இந்திய அணி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில்  ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…

52 minutes ago

இந்தியாவின் முதல் 3டி-ஸ்டார் தொழில்நுட்பம்! Vivo V50 போனின் சிறப்பு அம்சம்!

டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…

2 hours ago

10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகள்., 12 கோடி கழிவறைகள்., பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

2 hours ago

தொடங்கியது இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம்! கடும் போக்குவரத்து நெரிசல்!

மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…

3 hours ago

‘பேட்டிங் மட்டும் போதாது தம்பி”…அபிஷேக் சர்மாவுக்கு ஹர்பஜன் சிங்  கொடுத்த அட்வைஸ்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…

3 hours ago

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி! உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

மதுரை : திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பினர் பிப்ரவரி 4 அன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில்…

4 hours ago