சென்னையில் கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட தனி அறை அமைக்கப்பட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

Published by
Rebekal

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நடைபெற்ற லாக்கப் இரட்டைப் படுகொலையை மையமாக வைத்து அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது அவசியம் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரம் இந்தியாவையே உலுக்கும் அளவிற்கு பெரிய போராட்டமாக வெடித்த சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நிகழ்ந்த தந்தை மகன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகியோரின் சித்திரவதை கொலைகள் இந்தியா முழுவதையுமே மிகவும் உலுக்கியது. இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தூண்டுதல் காரணமாக சமூக வலைதளங்களில் பெரும் புரட்சியாக வெடித்த இந்த சம்பவத்தால் தற்பொழுது கொலைக்கு காரணமான காவலர்கள் சிபிசிஐடி விசாரணையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இது குறித்து பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணைப்படி சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் சரியாக பதிவாகியிருந்தால், தவறிழைத்தவர்களை உடனடியாகக் கண்டறிந்து இருக்கலாம்.

ஒரே நாளில் அழிந்துவிடும் படி அமைக்கப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளால் இந்த காவல் நிலையம் அடிக்கடி ஏதேனும் தவறுகள் நடக்கக் கூடிய இடமா என்று சந்தேகிக்ககூடிய நிலை தோன்றுகிறது என கூறியுள்ளார். மேலும் அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த இந்த காலத்தில் குற்றங்களை தவிர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கண்காணிப்பு கேமராக்கள் தான். இதனால் தான் சென்னையில் சாலைகளில் 50 மீட்டருக்கு ஒன்றாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதுவே காவல் நிலையத்திற்கும் பொருந்தும்.

குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதில் இது மிகவும் பயன்படும், சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டை படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புவதுடன் தவறிழைத்தவர்களுக்கு நிச்சயம் அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் சென்னையில் சிசிடிவி காட்சிகளை பதிவு செய்வதற்காகவே தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும் எனவும் மனித உரிமைகள் மதிக்கப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன் எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

9 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

9 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

10 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

11 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

11 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

14 hours ago