இனி தடையின்றி ரேஷன்- புதியநடைமுறை அமல்!

Published by
kavitha

தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதியமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை தடையின்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் திருத்திய வழிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அக்.,1 தேதி முதல் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத்திட்டம் அமல்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் பல இடங்களில் பயோமெட்ரிக் சரியாக இயங்காததால் மக்கள் சிரமப்பட்டனர்.இதனால் ரேஷன் பொருட்களை பெறுவதில் தேக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் தடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்க திருத்தப்பட்ட புதியமுறையானது இன்று (புதன்கிழமை) முதல் செயல்படுத்தப்படுகிறது.

இதனால் குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பொருட்களை பெறலாம். குடும்ப அட்டைதாரர்களின் தற்போதைய சிரமத்தை குறைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடு என்பதனை கருத்தில் கொண்டு அட்டைதாரர்கள் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் கொடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பபட்டுள்ளதால் தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் ஸ்மார்ட் ரேஷன் கார்டினை காட்டி ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ள முடியும்.திட்டப்படி வெளிமாநிலத்தவருக்கும் பொருட்கள் வழங்கப்படுகிறது .

தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக நவம்பர் வரை விலையில்லாமல் ரேஷன் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

2 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

2 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

3 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

4 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

5 hours ago

தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?

சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…

5 hours ago