ஒரு ரேபிட் டெஸ்ட் கருவி ரூ.600க்கு வாங்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸை விரைவாக பரிசோதனை மேற்கொள்ள இந்தியா, 15 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை சீனாவிடமிருந்து ஆர்டர் செய்தது.
அதில் முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் கிட்கள் இந்தியாவிற்கு வந்திருந்தது. பின்னர் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநிலங்களுக்கு , மத்திய அரசு பிரித்து கொடுத்தது. அதன்படி மத்திய அரசு, தமிழகத்திற்கு இன்று 12,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை அனுப்பியது.
இதுமட்டுமல்லாமல் தமிழக அரசு , 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை சீனாவிடம் நேரடியாக ஆர்டர் செய்திருந்த நிலையில் நேற்று 24,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தது. இதனால் தற்போது தமிழகத்தில் மொத்தம் 36,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் உள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு ஆர்டர் செய்த ஒரு ரேபிட் டெஸ்ட் கிட்டின் விலையை தமிழக அரசு கூறியுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த விலையான ரூபாய் 600-க்கு தான் ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கப்பட்டது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரேபிட் டெஸ்ட் கிட் ஒரு முறை தான் பயன்படுத்த முடியும்.ஒரு கிட்டின் விலை ரூபாய் 600 என்று தெரிவித்துள்ளது. இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா பரிசோதனைக் கருவிகள் எத்தனை.? என்ன விலை.? மற்றும் எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டுஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…