முதல்வரை விமர்சிக்கும் தகுதி ஆ.ராசாவுக்கு இல்லை.! ஆர்.பி உதயகுமார்.!

Default Image

மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரானாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பாதுகாப்பு அரண் அமைத்து பல நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.

முதல்வரின் நடவடிக்கையால் தான் தமிழகத்தில் குணமடைந்தோர்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நோய் பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு தான் முக்கியம். தொடர்ந்து பேசிய அவர்,
சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் முதல்வர் பதவி விட்டு செல்லுங்கள் என கூறிய ஆ.ராசா ஒரு வடிகட்டிய… அரசியல் நாகரீகம் கருதி சொல்லவில்லை… ஊழல் வழக்கில் சிறை சென்ற ஆ.ராசா முதல்வரை பதவி விலக சொல்ல உரிமையில்லை.. தகுதியில்லை.. ஆ.ராசா தன்னை அதிமேதாவியாக நினைத்து கொண்டு விளம்பரத்திற்காக அறிக்கை விடுகிறார் என தெரிவித்தார்.

சமீபத்தில் சாத்தான்குளம் சம்பவத்தில் முதல்வர் பதவி விட்டு செல்லுங்கள் என ஆ.ராசா  அறிக்கை வெளிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்