திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தலைமையில் இன்று திருவாரூர் சன்னாநல்லூர் உட்பட 3 இடங்களிலும், நாகையில் 2 இடங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை தென்னக ரயில்வே புறக்கணிப்பதாகவும், குறிப்பாக திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ரயில் நிற்காமல் செல்கிறது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருவாரூர் , நாகை மாவட்டங்களில் விரைவுரயில் நின்று செல்ல வேண்டும் உள்ளிட்ட 32 கோரிக்கைகளை முன்வைத்து, இன்று திருவாரூர் சன்னாநல்லூர் உட்பட 3 இடங்களிலும், நாகையில் 2 இடங்களிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.
இந்த ரயில் மறியல் போராட்டமானது, மத்திய அரசை எதிர்த்து, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தலைமையில் நடைபெற்றது. இந்த ரயில் மறியல் போராட்டத்தால் திருவாரூர், நாகை ரயில்தடம் வழியாக செல்லும் ரயில் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…