கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து நடைபெற்ற விசாரணையில் முபின் வீட்டில் 76 கிலோ வேதி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 109 வேதிப்பொருட்கள் இருந்ததாக தகவல் வெளியாகின.
இதனை அடுத்து போலீசார் விசாரணையில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வட்டத்திற்க்குள் உள்ளனர். மேலும், இதனை தொடர்ந்து தமிழகத்தில் போலீசார் விசாரணையில் சந்தேகப்படும் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
அதன்படி, நெல்லை மேலப்பாளையத்தில் 4 பேரின் வீடுகளில் சோதனை நடைபெற்றது. சாஹிப் முகமது அலி (வயது 35), சையது முகமது புகாரி(வயது 36), முகமது அலி (வயது 38), முகமது இப்ராஹிம் (வயது 37) ஆகிய நான்கு பேர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
இன்று காலை 7:30 மணிக்கு ஆரம்பித்த இச்சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை திருவிழாவில் வெடிகுண்டு வெடித்தது சம்பந்தமாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரணை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற சோதனையில் 9 ஆண்டிராய்டு செல்போன்களும், 4 சாதாரண போன்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…