மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக இன்று சென்னையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலகர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் நினைவாக கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந்த நினைவிட சின்னம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது பேனா நினைவு சின்னம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
கருத்துகேட்பு கூட்டம் : இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் மீனவர் சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலகர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்கின்றனர். இந்த கருத்துகேட்பு கூட்டத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்துகிறது.
எதிர்ப்பு : இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவினர், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்திறனர், ஆம் ஆத்மி கட்சியினர் , சமூக செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி என பலரும் பங்கேற்கின்றனர். இந்த கருத்துகேட்பு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பாஜகவினர், சட்டப்பஞ்சாயத்து இயக்கத்திறனர், ஆம் ஆத்மி கட்சியினர் ஆகியோர் இந்த திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
81 கோடி ரூபாய் நிதி : பேனா நினைவு சின்னம் திட்டமானது பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை சார்பில் மாவட்ட கடலோரமண்டல மேலாண்மை ஆணையத்திடம் விண்ணப்பித்து இருந்தது. இதனை பரிசீலித்த ஆணையம், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு இதனை பரிந்துரை செய்தது.
அதன்படி, தேசிய கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டதை தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கருத்து கேட்பு கூட்டம் நடந்து வருகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…