சனாதன விவகாரத்தில் உச்சநீதிமன்ற நோட்டீஸ் வந்ததும் உரிய விளக்கம் அளிக்கப்படும்.! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்.!

Published by
மணிகண்டன்

சில வாரங்களுக்கு முன்னர், சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தமிழகம் மட்டுமல்லாமல் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியது. அவர், சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு சர்ச்சையானதை அடுத்து, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசியதை எதிர்த்து நாட்டில் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சனாதன சர்ச்சையில் நடவடிக்கை எடுக்கக்கோரியும், சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணை தேவை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் சனாதனம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, சனாதன சர்ச்சையில் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. சனாதன விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சனாதனம் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன் என மனுதாரருக்கு நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளனர். சனாதன விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சனாதன சர்ச்சை விவகாரத்தில் தலையிட விருப்பமில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே, சனாதன எதிர்ப்பு பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், சனாதன சர்ச்சை குறித்து இன்னும் உச்சநீதிமன்ற நோட்டீஸ் கிடைக்கப்பெறவில்லை. கிடைத்தவுடன் உரிய விளக்கம் அளிப்போம். நாங்கள் நீதிமன்றத்தை நம்புகிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

40 minutes ago

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?

கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…

45 minutes ago

மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க விதிமுறைகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

57 minutes ago

பாஜக உருட்டி மிரட்டி அதிமுக கூட கூட்டணி வைத்திருக்கிறது! செல்வப்பெருந்தகை பேச்சு!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…

2 hours ago

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

3 hours ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

4 hours ago