விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.! ஒருவர் கைது.! உரிமையாளர் மீது வழக்குப்பதிவு.! 3 பேருக்கு வலைவீச்சு.!

Default Image

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலை தீ விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கணஞ்சாம்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிலாந்தர். 6 பேருக்கு பயங்கர தீ காயம் ஏற்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் முதலில் போர்மென் கண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார்.  மேலும், ஆலை உரிமையாளர் மாயக்கண்ணன் மற்றும் அவரது மனைவி ஆறுமுகத்தாய், ஒப்பந்ததாரர் கந்தசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்