பேரறிஞர் நினைவு தினம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதி பேரணி.!

Published by
மணிகண்டன்

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. 

மறைந்த முன்னாள் முதலாவரும், திராவிட முன்னேற்ற கழக கட்சியை தோற்றுவித்தவருமான சி.என்.அண்ணாதுரை எனும் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளை ஒட்டி பல அரசியல் தலைவர்கள் தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சிலை முதல் அண்ணா சதுக்கம் வரையில் முக்கிய திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்களுடன் அமைதி பேரணி நடத்தினார்.

அதன் பின்னர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி தனது மரியாதையை செலுத்தினார். இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் குழு தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த பேரணி குறித்தும், பேரறிஞர் அண்ணா குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்.  ‘தம்பி’ என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம். தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம். என பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

3 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

14 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

18 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

19 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

19 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

19 hours ago