ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்துள்ள குந்தவாழுரை சார்ந்தவர் கார் ஓட்டுனர் தேவராஜ்(22). அதே பகுதியை சேர்ந்த காயத்ரி(19) என்பவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இதனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஐந்து மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பிறகு பெங்களூருவில் தேவராஜ் கார் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள தனது சித்தி சந்திராவின் வீட்டிற்கு தேவராஜ் தனது மனைவியுடன் வந்துள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் திருமணத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்காத மனவருத்தத்தில் இருந்த இருவரும் வீட்டின் வெளியே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…