தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், லட்சத்தீவு, குமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை கொண்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நிவர், புரவி ஆகிய இரண்டு புயல் வந்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த மழையும் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் நிறைந்து பயிர்களை சேதப்படுத்தி உள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நிவர், புரவி புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் தொகை இன்னும் சில பேருக்கு வந்த சேரவில்லை என தகவல் வெளியாகி வரும் நிலையில் மேலும் அங்கு சேதத்தை இந்த மழை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…