மருத்துவமனையில் அலட்சியமாக பணிபுரிந்த செவிலியர்!

Default Image
  • மருத்துவமனையில் அலட்சியமாக பணிபுரிந்த செவிலியர்.படம் எடுத்து வெளியிட்ட நபர்.
  • அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணி பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டில் அரசு மருத்துவமனை உள்ளது.அதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கர்ப்பினி பெண்கள் உட்பட ஏராளமான நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த கல்பனா என்ற செவிலியர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.அப்போது அவர் செல்போனில் பேசிக் கொண்டே ஊசி போட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அந்த சம்பவத்தை படமாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த படம் வைரலாகி மருத்துவமனை பணியாளர்களின் அலச்சியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் இந்த தகவல் மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கும் சென்றுள்ளது.பின்னர் அவர் உடனடியாக  அந்த செவிலியரை அளைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

மேலும் அந்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்