நாடகம் பார்க்க சென்றதால் குழந்தையை சீரழித்ததை உணராத தாய்!

Default Image

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.அவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

அந்த கிராமத்தில் மழை பெய்வதற்காக அர்ஜுனன் தவசு என்ற நாடகம் 3 நாட்கள் பிரம்மாணடமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த பெண் இரண்டு நாட்கள் அந்த நாடகத்தை பார்த்துள்ளார்.

பின்னர் மூன்றாவது நாள் அந்த நாடகத்தை பார்க்க தூங்கிக்கொண்டிருந்த அந்த 7 வயது சிறுமியை வாசலில் படுக்க வைத்துவிட்டு நாடகம் பார்க்க சென்றுள்ளார்.சுமார் 1மணி நேரம் கலித்து அந்த சிறுமி அலுத்து கொண்டே அம்மாவை தேடி நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளது.

பின்னர் குழந்தை அலுத்து கொண்டு வந்ததை பார்த்த அந்த பெண் குழந்தையிடம் சென்றுள்ளார்.அப்போது சிறுமியின் துணியெல்லாம் ரத்தமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் உடனே மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.

அதன் பிறகு அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை சீண்டிய கொடூரனை தேடி வருகின்றன.

மேலும் சிறுமியின் உடல்நிலை மோசமாகிய காரணத்தால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்