மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு இருந்த வீட்டு உரிமையாளர் ஒத்திகை முடியும் முன்பே காலி செய்யக்கூறி மிரட்டியதால் இரண்டு குழந்தையுடன் தாய் தற்கொலை.!
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மலேசியாவில் சமையல் வேலை செய்து வருகிறார், இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், அபிஷேக் என்ற மகனும் மங்கையரசி என்ற மகளும் இருக்கிறார், இந்நிலையில் தனது குழந்தைகளின் படிப்பிற்காக சிவகங்கை மாவட்டத்தில் ஒத்திகைக்கு 3 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டை பிடித்தார்.
இந்நிலையில் கடந்த வியாழன் கிழமை அவருடைய வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது இதனால் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி உள்ளார்கள் ஆனால் கதவு திறக்கப்படவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் வேகமாக கதவை உடைத்தனர், அப்பொழுது வீட்டிற்குள் காளீஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது, மேலும் குழந்தைகள் விஷம் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் காளீஸ்வரி தனது தற்கொலைக்கு வீட்டின் உரிமையாளர் கார்திகேயன்தான் காரணம் என்று எழுதி வைத்துள்ளார், மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு இருந்த வீட்டு உரிமையாளர் ஒத்திகை முடியும் முன்பே காலி செய்யக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரி தகாத வார்த்தைகளில் காளீஸ்வரியை திட்டியதாக தெரிய வந்தது. அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…