ADMK Chief Secretary Edappadi Palaniswami [File image]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் (எம்ஜிஆர் மாளிகை) இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டணி பற்றி கவலை வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி..!
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பற்றி கூறினார். அதில், தற்போது வாக்காளர்கள் பட்டியலில் நிறைய குளறுபடி உள்ளது. ஆளும் திமுக கட்சி வேண்டுமென்றே சில குளறுபடிகளை செய்து அதிமுக வாக்குகளை சிதைக்க பார்க்கிறது. அதனால் மாவட்ட செயலாளர்கள் வாக்காளர்கள் இறுதி பட்டியலை கண்ணும் கருத்துமாக ஆய்வு செய்து அதனை தலைமை தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக கூறினார்.
மேலும், வரும் ஜனவரி 17ஆம் தேதி புரட்சி தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள் விழாக்கள் பற்றியும், அடுத்து புரட்சி தலைவி அம்மா (ஜெயலலிதா ) பிறந்தநாள் விழாவிலும் செய்ய வேண்டிய நலத்திட்ட விழாக்கள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டோம் என்று குறிப்பிட்டார்.
பொதுக்கூட்டங்கள் நடத்தி அதிமுக அரசின் சாதனைகள் பற்றி மக்களுக்கு தெரிவிக்க அதிமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார் என்றும், தற்போது தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. விலைவாசி, வரி ஆகியவை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பொதுக்கூட்டங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டியது கட்டாயம் என நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…