அதிமுக-பாஜக முறிவுக்கு பின், அண்ணாமலை அவர்கள் டெல்லி சென்ற நிலையில், அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அண்ணாமலை அவர்கள் டெல்லி பயணத்தை முடித்து இன்னும் சென்னை திரும்பாததால், இந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் தலைமையில் இன்று பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக தலைமையகமான கமலாலயத்தில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் உள்ள நிலையில் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கரு.நாகராஜன், வினோத் செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில், மாவட்ட ரீதியாக கட்சி எவ்வாறு பலப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…