வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்ற நபர் பாம்பு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு!

Default Image

வலையில் சிக்கிய பாம்பை மீட்க முயன்ற நபர் பாம்பு தாக்கியதில் பரிதாபமாக உயிரிழப்பு.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜசேகர் (35). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகாமையில், உள்ள வீட்டில் அடிக்கடி விஷபாம்புகள் வந்து போவதால், இவர் தனது கடைக்குள் வராமல் இருப்பதற்காக, வலை ஒன்றை  அமைத்துள்ளார்.

இன்று காலை அந்த வலையினுள், 6 அடி நீளம் கொண்ட விஷப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. இதனையடுத்து, வலையினுள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாம்பை மீட்க ராஜசேகர் முயற்சித்துள்ளார். பாம்பை மீட்க முயன்ற ராஜசேகரை அந்த பாம்பு கடித்துள்ளது. அது கொடிய விஷம் கொண்ட பாம்பு என்பதால், விஷம் ராஜசேகரின் உடல் முழுவதும் பரவியுள்ளது.

இதனையடுத்து, அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ராஜசேகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்