அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவருக்கு கீதா என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.
இவர் தனது மனைவி கீதாவுடன் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்பொழுது அவருக்கு டீ வாங்குவதற்காக அவரது மனைவி கீதா வெளியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்ததும், அவரது கணவர் மணிகண்டனை காணவில்லை.
மருத்துவமனையைச் சுற்றி கீதா மணிகண்டனை தேடி வந்தார். அப்பொழுது அங்கு வேலை பார்க்கும் அலுவலர் ஒருவர், எஸ்ரே ரூமில் ஒருவர் இறந்து கிடப்பதாக மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்தார். அவர்கள் கீதாவிடம் கூற அங்கு சென்ற பார்த்த கீதா, இறந்து கிடப்பது தனது கணவர் மணிகண்டன் என கூறினாள்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…