வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…வானிலை மையம் தகவல்.!!

Published by
பால முருகன்

தமிழகத்தில் கோடை மழை பல இடங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் ” கடந்த 24 மணி நேரத்தில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

60 இடங்களில் கனமழை, 11 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “வரும் மே 6-ஆம்  தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும், நீலகிரி, தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும்,  சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும்  தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவி (கடலூர்) 19, சங்கரி துர்கம் (சேலம்) 17, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 15, சாத்தூர் (விருதுநகர்) 14, திருச்செங்கோடு (நாமக்கல்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) . நந்தியாறு (திருச்சி) தலா 13, எடப்பாடி (சேலம்), சின்கோனா (கோயம்புத்தூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 12, புடலூர் (தஞ்சாவூர்), காஞ்சிபுரம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), கடலூர், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), எண்ணூர் AWS (திருவள்ளூர்) தலா 11 என மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

19 mins ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

2 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

2 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

3 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

3 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

4 hours ago