Balachandran [Image source : deccanchronicle]
தமிழகத்தில் கோடை மழை பல இடங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் ” கடந்த 24 மணி நேரத்தில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
60 இடங்களில் கனமழை, 11 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “வரும் மே 6-ஆம் தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும், நீலகிரி, தேனியில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவி (கடலூர்) 19, சங்கரி துர்கம் (சேலம்) 17, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 15, சாத்தூர் (விருதுநகர்) 14, திருச்செங்கோடு (நாமக்கல்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) . நந்தியாறு (திருச்சி) தலா 13, எடப்பாடி (சேலம்), சின்கோனா (கோயம்புத்தூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 12, புடலூர் (தஞ்சாவூர்), காஞ்சிபுரம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), கடலூர், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), எண்ணூர் AWS (திருவள்ளூர்) தலா 11 என மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…