தேர்தல் நேரத்தில் மக்களுக்கு மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும் – தமிழக முதல்வர்

Default Image

நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறுகையில், தேர்தல் நேரத்தில் மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும்  என்று தெரிவித்துள்ளார்.  

இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், நேற்று நாமக்கல் மாவட்டத்தில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும்  என்றும், இன்னும் அற்புதமான அறிவிப்புகள் தமிழக மக்களுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார். மேலும், மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி மக்களிடம்  சேகரிப்பில் ஈடுபட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்