நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி..!

Published by
லீனா

நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. 

இதுகுறித்து சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நாளை நவம்பர் 01 – ‘தமிழ்நாடு நாள் அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக வருகை தரவிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க பெரும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் காத்திருக்கின்றேன்.

உறுதியாக திட்டமிட்டபடி நடைபெறவிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பெருநிகழ்வில் பேரெழுச்சியுடன் கலந்துகொள்ள வருகை தரும் பேரன்பிற்குரிய உறவுகளும், தம்பி தங்கைகளும் பயணத்தை மிகவும் பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக நெடுந்தொலைவிலிருந்து பல மணி நேரங்கள் வாகனங்களில் பயணித்து வரும் உறவுகள் எவ்வித அவசரமுமின்றி, நிதானமாக வாகனங்களில் பயணித்து வரவேண்டுமெனவும், அதற்கேற்றவாறு பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு தொடங்க வேண்டுமெனவும் அன்புடன் அறிவுறுத்துகிறேன்.

பயணத்தின் பொழுது நம்மால் மக்களுக்கு எந்த இடைஞ்சல்களும் ஏற்படாதவாறு கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ளவேண்டும் எனவும் கண்டிப்புடன் அறிவுறுத்துகிறேன். தலைக்கவசம், இடவாறு அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாக வருகை தந்து, பேரணியில் பங்கேற்றுவிட்டு, பாதுகாப்பாக வீடு சென்று சேர்ந்துவிட்டீர்கள் என்ற செய்தியை அறிந்த பிறகுதான் என் மனம் நிம்மதி அடையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நம்முயிர்த் தமிழ்க்காக்க நாம் அனைவரும் உணர்வெழுச்சியோடு ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இப்பெருமைமிகு பேரணியில் நீங்கள் ஒவ்வொருவரும் பங்கேற்பது எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு உங்களுடைய பாதுகாப்பும் முக்கியம் என்பதை அன்பு உறவுகள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago