தமிழ்நாடு

டிக்கெட் மறுவிற்பனை… மாட்டிக்கொண்ட நடத்துனர்.! சிக்கியது எப்படி.?

Published by
மணிகண்டன்

பயணிகள் யாரேனும் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கிறார்களா என்பதை கண்காணித்து டிக்கெட் எடுக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது பேருத்து வழித்தடத்தில் பேருந்தை இடைமறித்து பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதுண்டு. அந்த பரிசோதனையில்  அரசு பேருந்து நடத்துனரே  மாட்டிக் கொண்ட சம்பவம் நேற்று நடைபெற்றது.

சேலம் மெய்யனூர் போக்குவரத்து கிளையில் அரசு பேருந்து நடத்துனராக பணியாற்றி வருபவர் நேரு. இவர் நேற்று சேலம் முதல் சிதம்பரம் செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியை தொடங்கினர். அப்போது உமங்கலம் பகுதியில் டிக்கெட் பரிசோதகர் பேருந்தை இடைமறித்து டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையாரும்… கார்த்திகை தீப திருவிழாவும்…

அந்த சமயம் தலைவாசல் பகுதியில் இருந்து ஏறி சிதம்பரம் செல்ல பயணிகள் எடுத்திருந்த டிக்கெட்டை பரிசோதர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் கொடுத்திருந்த இரண்டு 100 ரூபாய் டிக்கெட் இரண்டு 10 ரூபாய் டிக்கெட் ஆகியவை ஏற்கனவே நடத்துனர் நேருவால் விற்பனை செய்யப்பட்டது என்பது சோதனையில் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டை மீண்டும் விற்பனை செய்த சம்பவத்தை கண்டுபிடித்தவுடன் பரிசோதகர்கள் நடத்துனர் நேருவிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவரது சரிவர பதில் அளிக்காத காரணத்தால், உடனடியாக அவர் பணி நிறுத்தம் செய்யப்பட்டு வேறு நடத்துனர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது.

இதனை அடுத்து சேலம் கோட்ட போக்குவரத்து கழக பொது மேலாளர் அவரை விசாரணைக்கு அழைத்து விளக்கம் கேட்டிருந்தார். கான் பிறகு நடத்துனர் நேருவை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து பொது மேலாளர் பொன்முடி உத்தரவிட்டார். இதனை அடுத்து எவ்வாறு ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட டிக்கெட் மீண்டும் பயணிகளிடம் விற்பனை செய்யப்பட்டது என்றும், போலீ டிக்கெட் தயார் செய்யப்பட்டதா என்றும் பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் நடத்துனர் நேருவிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

1 hour ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

2 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

3 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

4 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

5 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

5 hours ago