சாதாரண பயண கட்டண பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒரு குட்நியூஸ்..!

Default Image

சாதாரண பயண கட்டண பேருந்துகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த, நான்காவது கட்ட பேச்சுவார்த்தை 12.05.2022 அன்று மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் திரு. போக்குவரத்துத்துறை தலைமையில், முதன்மைச் செயலர் டாக்டர்
கே.கோபால்,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டாவை நிர்ணயம் செய்திட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் பேரில், “மாநகர் போக்குவரத்துக் கழகம்(சென்னை)லிட்டி சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சாதாரண பயண கட்டண பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதித்ததை தொடர்ந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பெற்று வந்த வசூல்படி(Collection Batta) குறைவினை ஈடுகட்டும் வகையில் அதனை உயர்த்தி முறைப்படுத்தி வழங்கும் வகையில் சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்” அமைச்சர் என மாண்புமிகு போக்குவரத்துத்துறை அவர்கள்
அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்