சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து பல லட்சம் கொள்ளை.! 6 பேர் நீதிமன்றத்தில் சரண்.!

Default Image

சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் என கூறி 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த கும்பல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 

சென்னை பிரட்வே, பார்டர் பஜாரில் கடை நடத்தி வருபவர் அப்துல் ஜமால். இவர் வீடு அருகில் மலையப்பன் தெருவில் இருக்கிறது. அங்கு கடந்த 13ஆம் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தங்களை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அதிகாரிகள் என கூறி சோதனை செய்துள்ளார்.

கடைகளிலும் சோதனை செய்துள்ளனர். அந்த சமயம் 20 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டு அங்கு அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் குறித்து முகமது ஜமால் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை செய்து வரும் வேளையில் அந்த கொள்ளைக்கார கும்பல் இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டனர். மேலும் தாங்கள் கொள்ளையடித்தது 2 கோடி எனவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்