கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் நாரிபுரம் கிராமத்தில் சீனப்பா என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.மேலும் இவர் 13 வயதான சிறுமி ஒருவரை வளர்த்து வந்துள்ளார்.
அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வழக்கம் போல் சிறுமி பள்ளிக்கு சென்ற போது மிகவும் சோர்ந்து காணப்பட்டுள்ளார்.
அந்த சிறுமியிடம் ஆசிரியர் ஏன் இவ்வளவு சோர்வா இருக்கிற என்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த சிறுமி தனது வளர்ப்பு தந்தை பலமுறை தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் அதற்கு நாகேஷ் என்ற நபர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை கேட்ட ஆசிரியர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதன் காரணமாக மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சீனப்பாவையும் அவருக்கு உடந்தையாக இருந்த நாகேசையும் கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை வழக்கு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அப்போது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சீனப்பாவுக்கு போக்சோ உட்பட 35 ஆண்டுகள் சிறை தண்டனையும் 31 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த நாகேசுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…