பள்ளி முடிந்து வீடு திரும்பாத சிறுமி !எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த தந்தை!

Default Image
  • பள்ளி முடிந்தவுடன் அப்பாவை காண செல்லாத சிறுமி.எங்கு தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த தந்தை.
  • பாலியல் வன்புணர்வின் காரணமாக மரணமா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் ஆவார்.இவர் ஒரு கட்டிட தொழிலாளி  ஆவார்.இவரது மகள் அப்பகுதியில் உள்ள சித்துராஜபுரம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார்.

பள்ளி முடிந்தவுடன் அப்பா வேலை செய்யும் இடத்திற்கு சென்று விடுவார்.பின்னர் சுந்தரம் தான் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வார்.இந்நிலையில் கடந்த 20 -ம் தேதி மாலை பள்ளி முடிந்தவுடன் அப்பாவை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் அவர் சுந்தரம் வேலை செய்யும் இடத்திற்கு வரவில்லை.பின்னர் வெகு நேரம் ஆகியும் சிறுமி வராததால் பதறி போன சுந்தரம் சிறுமியை தேடியுள்ளார்.பெற்றோரும் உறவினர்களும் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இந்நிலையில் மறுநாள் காலை காட்டு வேலைக்கு சென்ற மக்கள் அங்கு சிறுமி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினர் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் மாணவி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar