அமைச்சர் வீட்டில் சோதனை.! அமலாக்கத்துறையினரிடம் சிக்கிய திமுக தொண்டர்.!

Published by
மணிகண்டன்

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் போது ஒரு திமுக தொண்டரும் உள்ளே மாட்டிக்கொண்டார். 

இன்று காலை முதல் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடு அலுவலகம், விழுப்புரத்தில் உள்ள பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அப்போது சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்யும் போது அவரது வீட்டிற்கு திமுக தொண்டர் ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அந்த சமயம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற இருந்ததால் அவரது போனையும் அதிகாரிகள் வாங்கி வைத்துக்கொண்டு வெளியில் அனுப்ப மறுத்துவிட்டனர்.

பின்னர் அவரிடம் செல்போன் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர். அப்போது அந்த திமுக தொண்டர் கூறுகையில், நான் எங்கள் தொகுதியில் உள்ள கல்லூரி விஷயமாக மனு அளிக்க காலை 8 மணிக்கு வந்தேன். அப்போது வந்த அதிகாரிகள் எனது போனை வாங்கி வைத்து கொண்டு வெளியில் அனுப்ப மறுத்து விட்டனர். பின்னர், அவர்கள் சிறுது நேரம் கழித்து போனை கொடுத்து வெளியே அனுப்பிவிட்டனர். பின்னர் நான் அவர்களிடம் என்னிடமும் ஒன்றுமில்லை. இங்கிருந்தும் (அமைச்சர் பொன்முடி வீட்டில்) நீங்கள் கொண்டு செல்வதற்கு எதுவும் இல்லை என கூறிவிட்டு வந்துவிட்டேன் என அந்த திமுக தொண்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

2 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

3 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

5 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

5 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago