95 Year Old WomanBharatanatyam [file image]
தமிழ்நாடு : திறமைக்கு வயது இல்லை என்பதற்கு உதாரணம் வயதானவர்கள் செய்யும் விஷயங்களை பார்த்து நாம் கற்றுக்கொண்டு இப்போம். வயதான பெரியவர்கள் பலரும் தங்களுடைய திறமைகளை வயதாகியும் நம்மளிடம் காட்டி நம்மளை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவார்கள். அப்படி தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி அழகாக பரத நாட்டியம் ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
ஓ ரசிக்கும் சீமானே என்ற பழைய தமிழ் பாடலுக்கு அழகாக நடனம் ஆடும் பாட்டியின் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அந்த அழகான வீடியோ ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும் ஐந்தாயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
95 வயதான இந்த பெண் வயதானவர்களுக்கான விஸ்ராந்தி இல்லத்தில், ஒரு நிகழ்ச்சி நடந்தபோது, அனைவரையும் கவரக்கூடிய வகையில் தனது திறமையை வெளிக்காட்டினார். இப்படி பட்ட திறமையை வைத்து இருக்கும் இந்த பெண் கண்டிப்பாக இளமையாக இருந்த சமயத்தில் பெரிய நடன கலைஞராக இருந்திருப்பாரோ என நீங்கள் யோசிப்பது புரிகிறது.
நீங்கள் நினைத்தது சரி தான் இந்த பெண் 1940-களில் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் மாணவியாக இருந்ததாகவும், சந்திரலேகா போன்ற திரைப்படங்களில் நடனமாடியதாகவும் கூறப்படுகிறது. இவர் நடனடமாடிய வீடியோவை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் கை தட்டி வருகிறார்கள்.
மேலும், சிலர் ஆரோக்கியமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதோடு நடனமாடவும் முடியும் என்பதை இந்த சக்தி வாய்ந்த பாட்டி காமித்துவிட்டார் எனவும் , முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது. இளமை இன்னும் அப்படியே இருக்கிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்” எனவும் கூறி வருகிறார்கள்.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…