திருப்பூர் பின்னலாடை கம்பெனிகளில் வேலைக்குச் சேர ஆட்கள் கிடைப்பதில்லை என நிறுவனத்தின் உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர். அப்படியே வேலைக்கு சேர்ந்தாலும் ஒரு சில நாட்களில் வேலையை விட்டு சென்று விடுவதாகவும், அதிக சம்பளம் கொடுத்தும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருப்பூரில் உள்ள ஒரு பின்னலாடை கம்பெனியின் போதிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதி கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு வித்தியாசமான முறையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பின்னர் அந்த அறிவிப்பில் வேலைக்கு சேரும் ஒவ்வொருவருக்கும் சம்பளத்துடன் மதியம் ஒரு கட்டிங் மற்றும் இரவு ஒரு குவாட்டர் வழங்கப்படும் என்றும், அது போக டீ செலவுக்கு காசும், வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அவர் ஒரு வால்போஸ்டர் போல் ஒட்டி தனது நிறுவனத்தின் முன் வைத்துள்ளார். இந்த விளம்பரம் வெளியான ஒரு சில மணி நேரங்களில் அந்த கம்பெனிக்கு தேவையான அனைத்து வேலை ஆட்களும் கிடைத்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிக்கும் மற்ற நிறுவனங்களும் இதே முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பலவிதமாக ஆட்கள் தேடிய நிலையில் யாரும் வரவில்லை எனவும், இந்த சுவரொட்டி விளம்பரம் ஒட்டிய சில மணி நேரங்களில் ஆட்கள் வந்துவிட்டதாகவும், நிறுவனத்தின் உரிமையாளர் பெருமிதம் தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த சுவரொட்டி விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…